tamilnadu

img

புதியக் கல்வி கொள்கைக்கு எதிராக ஒரு கோடி மின்னஞ்சல்

சென்னை, ஜூலை 6 புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒரு கோடி மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று இந்திய  மாணவர் சங்கம் அறிவித்துள் ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில மையம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய அரசு வெளியிட்டுள்ள  வரைவு புதிய கல்வி கொள்கை 2019, இந்திய கல்வி சூழலை சீர் குலைக்கும் அடிமை சாசனமாக உள்ளது. பள்ளி கல்வியில் 3,5,8  வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட சரத்துகள் முழுக்க கற்றல் சூழலில் மிக பெரும் அச்சுறுத்தலாக மாறும்.  

உயர்கல்வியில் கலை துறை படிப்புகளான பி.ஏ, பி.எஸ்.சி  உள்ளிட்ட படிப்புகளுக்கும் தேசிய நுழைவு தேர்வு நடத்தபடும்  என்கிற சரத்து, இனி வரும் தலை முறைகளுக்கு பட்டப்படிப்பை எட்டாக் கனியாக மற்றும் என்கிற  கல்வியாளர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். தேசிய கல்விக்கொள்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு முன்மொழிவுகளை இந்திய மாண வர் சங்கம் நிராகரிக்கிறது. அதனை மத்திய மனித வளத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஒரு கோடி மின்னஞ்சல்களை அனுப்பும் இயக்கத்தை www. saveeducation.in என்கிற இணையதளம் மூலம் நடத்து கிறது. இந்திய கல்வியை பாதுகாக்க வும், மாணவர்களின் எதிர் காலத்தை காத்திடவும் மேற்கண்ட  இணையதளத்தில் மத்திய மனிதவளத்துறைக்கு அனுப்பி உங்களது எதிர்ப்பை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.